ராஜினி உன்னிடமென்ன குற்றம் கண்டனர்?

காற்று
உன் மரணச்சேகதியை
காதில் அறைந்தது
வீதியோரம் உறைந்து கிடந்த
உனது குருதி
மனிதம் மரணித்ததை
மௌனமாகச் சொன்னது

நாம் என்ன செய்வோம்
வாயை இழந்தோம்
வெறும் வயிற்றுடன் மட்டும்
வாழ்ந்து தொலைக்கின்றோம்

தோழி;
சின்னஞ்சிறுசிட்டைப்போல
பறந்த திரிந்தாய்
நாம் பாடித்திரிந்தவீதியிலேயே
தன்னந்தனியாளாய்
அனாதையைப்போல
மரணித்தாயா?
உன்னிடமென்னகுற்றம் கண்டனர்? -ஒளவை- (எல்லைகடத்தல்)

மறுமொழியொன்றை வழங்குக