![]() |
|
| இலங்கையில் வன்முறையால் பாதிக்கப்பட்டோர் |
புலம்பெயர் தமிழ் படைப்பாளிகளின் 33வது இலக்கியச் சந்திப்பு செப்டம்பர் 23 ஆம் மற்றும் 24ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெற்றது. கிழக்கு லண்டன் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் நடந்த இந்தச் சந்திப்பின் முக்கிய தொனிப்பொருளாக ‘’இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைகள்’ என்ற விடயம் அலசப்பட்டது.
1988ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடந்துவரும் இந்த இலக்கியச் சந்திப்பு நிகழ்வுகளில் இலங்கை, இந்தியா உட்பட உலகின் பல பாகங்களிலும் இருந்து வரும்,- குறிப்பாக ஐரோப்பாவின் பல பாகங்களில் இருந்து வரும்,- தமிழ் படைப்பாளிகள் கலந்துகொண்டு வருகிறார்கள்.
இலங்கையின் தற்கால நிகழ்வுகளால் விழிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களின்- சமூக அவலங்களினால் மிகவும் மோசமாகப் பாதிப்படையும் நிலையில் உள்ள, புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ள மக்களின் நிலைமைகள் குறித்து இந்தச் சந்திப்புகளில் தாம் அதிக கவனம் செலுத்துவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.
-BBC tamil-
